Sunday, February 26, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

859-

மறந்து போகாமலிருக்க
பிரபஞ்சத்திடம்
சொல்லிவைத்திருக்கிறேன்

860-

மனதில் இருந்த வரிக்கும்
தாளில் வந்த வரிக்கும்
இடையில் தேடினேன்
தொலைந்த வரியை

861-


இருள் வழி
நடக்க
இருள் ஒளியாச்சு

862-

தள்ளி வைத்த தூக்கம்
சொல்லாமல் வந்து
தட்டுகிறது
இமைகளின் கதவை

No comments:

Post a Comment