Tuesday, February 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

849-

இது என்
இன்றைய முகம்
இதுவே என்
முகமல்ல

850-

வசதியாக
கால் நீட்டி நடக்கிறான்
வழிப்போக்கன்

851-

இந்த பூக்களில்
நீங்கள்
எந்த பூவின்
வாசம்

852-

தெரியாமல்
நடந்த வழி
திரும்பி நடக்க
நட்பாச்சு

853-

அன்பின்
கரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்

854-

நாய் வாலை
நிமிர்த்திய வரியில்
பொய் சுருண்டிருந்தது

855-

முந்திச்
சென்றவனின் பிணம்
பிந்திச் சென்றது

856-

நான் இல்லாது
போனபின்
என் நிழல்
என்ன செய்யும்

857-

உங்கள்
எந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்

858-

இருள்
மகுடியென

சுடர் அசையும்
பாம்பென

3 comments:

  1. உங்கள்
    எந்த முகமூடியும்
    அந்த வரிக்கு
    பொருந்தவில்லை
    விட்டுவிட்டுப் போய்
    வேறு வேலை
    பாருங்கள்
    அருமையான வரிகள் .

    ReplyDelete
  2. அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    வலைச்சரத்தில் கவிதை சரம்

    ReplyDelete
  3. அன்பின்
    கரம் நீளும்
    பிரபஞ்ச
    விளிம்பைத் தொடும்
    அழகான வரிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete