Tuesday, February 14, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

842-

பாறை இருள்
தள்ளிப் பார்த்து
முடியாமல்
நின்றுவிட்டேன்

843-

காணமல் போய்
கிடைத்தேன்
வேறு நானாய்

844-

புகையாகவே சுழலும்
வரி வடிவம்
விரும்பா வார்த்தைகள்

845-

கல்லறையில் மழை
புரண்டு
படுக்கிறேன்

846-

கண்ணீரே
கோபித்துக்கொள்ளாதே
அழுவதற்கு
எனக்கு காரணங்கள்
கிடைக்கவில்லை

847-

என் உயரத்திலிருந்த
மிருகத்தை சந்தித்தேன்
பெயர் கேட்டேன்
சொன்னது
என் பெயரை

848-

எழுது என்ற கட்டளை
தூக்கிப்போட்டது
மொழி வனத்திற்குள்

No comments:

Post a Comment