Saturday, January 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

830-

புன்னகை
பூங்கொத்தைப் போல
யாருக்கும் தரலாம்

831-

என்னிடம் எதுவுமில்லை
உள்ளங்கையில்
வந்து விழும்
மழைத்துளிகளைத் தவிர

832-

தொலைவிலிருந்து
வருகிறேன் என்றான்
அவன் கண்களில்
நீண்டிருந்த தூரத்தை
வரியில் உணர முடிந்தது

833-

வனத்திற்குச்
சென்றபோது
நானொரு மூங்கில்
திரும்ப
புல்லாங்குழல்

No comments:

Post a Comment