Wednesday, December 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

786-

நினைவு
தள்ளி விட
நினைவைத்
தள்ளிவிட்டு
நின்றேன்
விழாமல்

787-

எந்த வழியாக
வந்தீர்கள்

நான் உண்டாக்கிய
வழியாக

788-

நீங்கள்
சொல்லி இருக்கலாமே
என்றேன்

நீங்கள்
கேட்டிருக்கலாமே
என்றார்

789-

ஏதோ ஒரு கவிதையில்
இரவை
கிழித்தெறிந்தபோது
விடிந்திருந்தது

790-

விழித்திருக்கச் சொல்லவில்லை
இந்த நள்ளிரவு
நான்தான் தூங்காமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இருளின் பிம்பங்களை

791-

மறைக்க
மறைத்தது
மறைத்தது
என்னை

792-

கொல்வதற்கு முன்
ஆடு வாங்க வந்தேன்

கொன்று விட்டார்கள்
இறைச்சி வாங்கிச் சென்றேன்

793-

சவப்பெட்டியை
பிணம் அசைப்பதில்லை
உன் வரியில்
உயிரில்லை

794-

தனிமையிடம்
தோற்றுவிடுகிறேன்

தனிமையும்
தோற்றுவிடுகிறது

சரியான விகிதத்தில்
வெற்றியைப்
பகிர்ந்து கொள்கிறோம்
இப்படி

795-

எல்லாமே
சொல்லப்பட்டுவிட்டன

எவ்வளவோ சொல்லியும்
பேனாவின் நாக்கு
சத்தமாய் உச்சரிப்பதை
நிறுத்தக்காணோம்

1 comment:

  1. ஏதோ ஒரு கவிதையில்
    இரவை
    கிழித்தெறிந்தபோது
    விடிந்திருந்தது
    - wow.. awesome..

    ReplyDelete