Wednesday, December 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

775-

கவிதையின்
கீழிறங்குகிறது ரத்தம்
கொல்லப்பட்டவனும் எழுதியவனும்
ஒன்றானவனாக இருக்க
கீழிறங்கி
நீள்கிறது ரத்தம்
கவிதையின்
கடைசி வரியாய்

776-

உன்னிடம்
பதில் இல்லையா
பதிலிடம்
நீயில்லையா

777-

நான் அழுவதை
கண்ணாடியில் பார்த்தபோது
கண்ணாடிப் பார்த்தது
நான் புன்னகைப்பதை

778-

உடல் ஒரு தீப்பெட்டி
ஒவ்வொரு குச்சியாய்
எரித்துக் கொண்டிருக்கிறேன்

779-

உருண்டோடும் திராட்சைகள்
விளையாடும்
பழத்தோட்டம்

No comments:

Post a Comment