Monday, December 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

763-

இந்த வரி
எழுதாதபோது
இன்னும் அழகாகவே
இருந்தது

764-

வாள் எனும் சொல்லை
உரக்கச் சொன்னேன்
காற்றை கிழித்து
அடங்கியது எனக்குள்

765-

வரைந்த தூக்குக்கயிறு
எறும்பு இழுத்துப் போக
நேராச்சு

766-

பொருளற்ற கவிதையில்
நானே
பொருள்

767-

முடியவில்லை ஆட்டம்
ஒப்பனையை
இறக்கி வைக்காதீர்கள்

768-

என்னை வீழ்த்துவதற்கான
வீயுகங்களை வகுக்கிறீர்கள்
அவைகளை நான்
கடந்து போவது தெரியாமல்

1 comment: