Saturday, December 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

755-

நான் நள்ளிரவில்
பகலை
நெய்பவன்

756-

கேட்காத இடத்தில்
கொட்டுவதும்
கேட்கும் இடத்தில்
துப்புவதும்
மனிதர்கள் செய்யும்
அபத்தம்

757-

நான் இறப்பதை
அனுமதிக்கவே மாட்டேன்
இறக்கும் வரை

758-

கால்களுக்குப்
பிடிபடாத பாதை என்று
எதுவுமே இல்லை

759-

ஓய்வு கொள்ளும்
உறங்காது
ஆயுதம்

No comments:

Post a Comment