Friday, October 21, 2011

ஓடும் ரயிலில்

ஓடும் ரயிலில்
கதவருகில் அமர்ந்திருந்த
பெரியவருக்கு
கொஞ்சம் தேநீரைப்
பரிமாறி கொண்டபின்
கேட்டேன்
சொன்னார்

உடம்பு சரியில்ல சார்
வாயில புண் வேற
இன்னைய பொழப்பு போச்சு
இவனுக்கு நல்ல ஓய்வு

ரயிலின்
சத்தத்தைக் கேட்டபடி
அவர் மடியில்
குழந்தை போல் கிடந்தது
புல்லாங்குழல்

1 comment: