Sunday, October 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புக்கள்

685-

எளிமையான
வரியின் மேல்
நான் ஊர்ந்து போகும்
சிறு எறும்பு
வேறொன்றுமில்லை

686-

காடு எரிகிறது என்று
எழுதிய வரியை
உடனே அழித்தேன்
வார்த்தைகளுக்குள்
வனம் அழிவதை
விரும்பவில்லை

687-

பெயரை
திரும்ப திரும்ப
அழிக்கிறேன்
புதிய பெயர்கள்
முளைக்க

688-

துளியை
மாபெரும்
துளியென
உடை
திரும்ப திரும்ப
உண்

689-

பூ
உடைந்தது
மணம்
உடையவில்லை

2 comments:

  1. //காடு எரிகிறது என்று
    எழுதிய வரியை
    உடனே அழித்தேன்
    வார்த்தைகளுக்குள்
    வனம் அழிவதை
    விரும்பவில்லை// I love this lines. Fantastic Raajaa sir

    ReplyDelete