Saturday, October 08, 2011

படிகள்

படிகளை வரைந்தாள் குழந்தை
எப்போது இதில்
ஏறிப்போவாய் என்றேன்
சிரித்தபடியே சொன்னாள்
நான் இறங்கி வந்த
படிகளைத்தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்

1 comment:

  1. குழந்தைகளை விடப் பெரிய கவிஞர்கள் இருக்கமுடியாது என்று மீண்டும் சொல்லும் அழகான கவிதையிது.சபாஷ்.

    ReplyDelete