Thursday, September 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

669-

தாகம் நிரம்பிய குளம்
தண்ணீராகவும்
தெரிகிறது

670-

வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன
அதனாலென்ன
பூமி திறந்திருக்கிறது

671-

குப்பி நிறைந்திருக்கும் நேரம்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
நிகழ்காலத்தை மாற்றாமல்

1 comment:

  1. குட்டி கவிதை எல்லாம் நல்லாயிருந்தது...

    ReplyDelete