Tuesday, September 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

665-

வெளியில்
தொலைந்தேன்

வெளியில்
நிறைந்தேன்

666-

சுமந்ததை
இறக்கிய பின்னும்
சுமக்கும் நினைவு

667-

தியானம் முடித்து
கண் திறக்கும்
எழுத்து

668-

பெரிதினும் பெரிதென
பெரிதினும் பெரிதென
பெரிதாகி
சிறிதானேன்

No comments:

Post a Comment