Sunday, September 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

639-

தொலைவான வனம்
தூரம் நிரப்பும்
பறவை ஓலி

640--

புல்லாங்குழலிலிருந்து
மழை பெய்கிறது

கேட்கிறது
மழை பெய்வது

641-

நானே தூசி
என்னை எதற்கு
தூசி தட்ட

642-

எனக்குள் மூழ்க
கண்டேன்
ஓர் கடல்

643-

சொல்
உதிரும்
அழுகையில்

644-

இருந்த இடத்தில் இல்லை
வேறு இடத்தில்
வலி

645-

பெயரின் மையத்தில்
பெயரற்ற
ஒற்றர்கள்





1 comment: