Thursday, August 18, 2011

வளர்தல்

சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது

நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது

பின் இறந்தது

முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது

அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்

வளர்கிறது சொல்
கவிதையில்

3 comments:

  1. வளர்கிறது சொல்
    கவிதையில்..

    நல்ல கவிதை!!

    ReplyDelete
  2. 1 chorinthiyar 13-aam athikaaram!

    sol anbaip pontrathuthaan.....

    ReplyDelete
  3. நல்லா இருக்கு ராஜா சார்

    ReplyDelete