Saturday, July 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

590-

என்னுள் நகர
கண்டேன் வானம்

என்வெளி விரிய
கொண்டேன் ஞானம்

591-

பிறகு
இரவு
அதன் பிறகு
பகல்
அவ்வளவுதான்
வேறொன்றுமில்லை

592-

மொழிக்குள் நுழைந்து
வார்த்தைகளில்
வெளியேறிவிடுவதை
எப்படி எழுத

593-

படிகளில்
இறங்கியது மழை

மழையில்
இறங்கின படிகள்

594-

சதுரத்திற்குள்
இருக்கும் சதுரங்கள்
சதுரத்திற்குத் தெரியாது

595-

பதில் கண்டெடுக்காத
கேள்விகள்
கேள்விகளே அல்ல

596-

எழுது
என்ற கட்டளையை
எழுத்தே
பிறப்பித்து விடுகிறது

597-

கண்ணீரும் மழையும்
பேசும்
புன்னகை
தள்ளி நின்று
பார்க்கும்

598-

துளிக்குள்
பதுங்கும் கடல்போல
மெளனத்திற்குள்
பதுங்குகிறது மொழி

599-

நிசப்தத்தின் கோடரி
இரவின்
மேல் விழும்
வழியும் கனவுகள்
ஒன்றிரண்டு
என் கரை வரும்

1 comment: