Friday, July 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

584-

பிறகுதான் சொல்லப்பட்டது
பசியாறிய இறைச்சி
சமாதானப் புறாவின்
உயிர் என்று

585-

எல்லாம்
இறக்கி வைத்தாயிற்று
இனி எதுவும்
சுமையில்லையே

இந்த கேள்வியை
இறக்கி வைத்தால் போதும்

586-

எழுத்தின் பசி
எழுப்பும்
உறங்கும் வார்த்தைகளை

587-

முதுகை நோக்கி
எறியப்படும் ஈட்டிகள்
துரோகத்தின்
விஷம் தோய்ந்தவை

588-

ஏதோ ஒன்று
நம்மை விரட்டுகிறது

ஏதோ ஒன்றை
நாம் விரட்டுகிறோம்

589-

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை

என்னிடமும்
சொற்கள் இருக்கின்றன

1 comment: