Saturday, July 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

560-

நானும் நீங்களும்
நானும் அவர்களும்
என்பது போலத்தான்
நானும் நானும்

561-

முறிந்து போன வார்த்தைகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில்

562-

யுத்தம் பழகியவன்
சத்தமில்லாமல்
கொல்வான்

563-

காற்றைத் திரித்து
கண்டேன் ஒரு வரி
அது கானம் இசைத்து
போனது பல வழி

564-

விரட்டாத பறவை
விட்டுச் சென்றது
வானத்தை

565-

இருளில்
படிக்கிறேன்
இருளை

566-

தூக்கம் கேட்கின்றன
இமைகள்

காட்சிகள் கேட்கின்றன
விழிகள்

567-

இரவும்

மதுவில் இறங்கிய
இரவும்

ஒரு இரவில்
தூங்கினேன்

ஒரு இரவில்
விழித்திருந்தேன்

No comments:

Post a Comment