Tuesday, July 05, 2011

மகளின் வரிகள்

மரங்களே
விதையிலேயே இருங்கள்
நீங்கள் வளர்ந்தால்
வெட்டித் தள்ளிவிடுவார்கள்

தான் எழுதிய வரிகளை
எடுத்து வந்து காட்டினாள் மகள்

படித்து
அவள் தலை தடவ
வெட்டப்படாத
மரங்களின் காற்று
என் மேல் வீசிச் சென்றது

3 comments:

  1. விதையிலேயே இருங்கள்
    நீங்கள் வளர்ந்தால்
    வெட்டித் தள்ளிவிடுவார்கள்

    குழந்தைக்கு தெரிந்த நிகழ்கால
    உண்மை நம்மில் பலருக்கு தெரியாமல்

    ReplyDelete
  2. குழந்தைக்கு இருக்கும் சுற்று சூழல்
    பற்றிய அக்கறை நம்மில்
    பலருக்கு
    இல்லாமல் போனது வேதனையான விஷயம்

    ReplyDelete