Wednesday, June 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

555-

எழுத வைக்கும்
வரியை
எப்படி எழுத

556-

தனிமை கிழித்த
உடலைத் தைக்கிறேன்
தனிமை கொன்று

557-

தேதிகளைக் கிழிக்கும் குழந்தை
காலத்தின் மறுமுனை போய்
திரும்பி வருகிறது

558-

எனது தற்கொலை
வெளியேற்றும் மரணம்
ஒருபோதும் வழங்கப்போவதில்லை
எனக்கு மன்னிப்பை

559-

பல்லாயிரம்
சொற்களைக் கொன்றேன்
எனினும் அடங்கவில்லை
என் பசி

No comments:

Post a Comment