Sunday, June 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

531-

எழுப்பிவிட்டு
நள்ளிரவின் மேல்
தாவிப்போகிறது கனவு

532-

பிடிபடாமல்
பிடிக்க முடியாமல்
வந்து வந்து
போகின்றன வரிகள்

533-

பெய்துமுடித்துவிட்டது மழை
வடிந்துகொண்டிருக்கும் மழைதான்
முடியக்காணோம்

534-

தாளில் ஏறிய எறும்பு
இழுத்துப் போகிறது
எழுத்துக்களை

535-

நாக்கின் நுனியில்
பெளர்ணமி மரம்
வார்த்தைகளுக்கு
ஒளி பாய்ச்சும்

1 comment: