Tuesday, May 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

488-

கிளையாக
நீண்டுபோனதை
முறித்துப் போடலாம் என
முடிவு செய்தபோதுதான்
தெரிந்தது
ஆழமாக
வேர்விட்டிருப்பது

489-

உங்களிடம்
நெருப்பு இருக்கிறது
அணையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

நான் அணைக்காமல்
பார்க்க வேண்டும்
என்பதில்லை

அதுவே அணையாமல்
பார்த்துக்கொள்ளும்

490-

முதுகு சொறிந்துவிடுபவரைப்
பார்த்தேன்

முகமே இல்லாமல்
பேசிக்கொண்டிருந்தார்


491-

அந்தரத்தில்
மிதந்துகொண்டிருந்தேன்
தள்ளிவிடுவார்களோ என்று
யோசித்தபோது
விழுந்துபோனேன்

492-

கையளவே
வார்த்தைகள்

கடலில்
எறிகிறேன்

மூழ்கி
மீன்களோடு
விளையாடிவிட்டுப்
போகட்டும்

493-

அல்லது இது
அல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்

494-

அசையும் கிளை
சொல்லெடுத்துத் தர
உரையாடுகிறேன்
வனத்துடன

2 comments:

  1. ஆஹா அருமை ஒவ்வொரு சிறு கவிதையும் ஆலமானக் கருத்தை சொல்லி செல்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அல்லது இது
    அல்லது அது
    அல்லது எதுஎனினும்
    என அல்லதுகளில்
    கழியுது காலம்
    //

    அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete