Monday, May 16, 2011

கடைசி வார்த்தை

கொல்லப்பட்ட பறவையின்
கடைசி வார்த்தை
துடிக்கிறது
காற்றில் போய்
தன் குஞ்சுக்கு
எதையோ
சொல்லி விட

6 comments:

  1. மனம் கனக்கச் செய்கிறது வார்த்தைகள். நான் இதே உணர்வில் எழுதியது உங்கள் வாசிப்புக்காக.

    முறிந்த சிறகுகளில்
    கனக்கிறது
    தொலைவின் பளு.
    விட்டுவந்த
    முட்டைகளில்
    குஞ்சுகளின்
    மருளும் விழி.
    விடைபெறுகிறது
    இனி எப்போதும்
    கிடைக்காத
    பறவை உயிர்.

    ReplyDelete
  2. sunderji...thanks.your poem sounds like prose.dont put all the words in one poem and no need to tell what all have in your mind.

    ReplyDelete
  3. நீங்கள் சொன்னதைக் கருத்தில் கொள்கிறேன் திரு.ராஜா. இனி எழுதும்போது இதைக் கவனத்தில் கொள்வேன்.அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  4. நெஞ்சம் பதைக்கும் வரிகள்....

    சபாஷ்...

    ReplyDelete
  5. ராஜா, உங்கள் ரசிகனாகி பல மாதங்கள் ஆனாலும், இப்பொழுதாவது சொல்லிட தோணிற்று. நின்று ரசிக்க மட்டுமே நேரம். அமர்ந்து பேசிட ஆசை மட்டுமே.

    ReplyDelete
  6. தோழர்களுக்கு நன்றி.சந்திப்போம்...

    ReplyDelete