Thursday, May 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

467-

வேட்டைக்கு பின்
இறந்து கிடந்தோம்
மிருகமும் நானும்

வேட்டைக்கு முன்
தப்பி பிழைத்தோம்
நானும் மிருகமும்

468-

வயதானால் என்ன
அந்தரங்கத்தில்
குழந்தை நான்

469-

வேகமாக
வெளியேறி விடுகிறோம்
அதைவிட வேகமாக
சிக்கியும் விடுகிறோம்

470-

காற்றில் செய்த சாவி
கையிலுண்டு

அது வானின்
எந்த கதவையும்
திறக்கும் நன்று

471-

வார்த்தை இல்லாதபோது
வெறுமனே பார்க்கிறேன்
வேறு ஒன்றும்
செய்வதில்லை

No comments:

Post a Comment