Wednesday, May 04, 2011

கவிதைக்குள்

கவிதைக்குள்
நுழைவது என்பது
ஒரு வனத்திற்குள்
நுழைவதைப் போல

கவிதையிலிருந்து
திரும்புவது என்பது
விலங்குகள் எதையும்
வேட்டையாடாமல்
ஒரு பூவைப்
பறித்துக்கொண்டு
வருவதைப் போல

1 comment: