Monday, April 25, 2011

இன்னொரு குழந்தை

பால்கனியிலிருந்து
நடந்துபோகும்
என்னைப் பார்த்தபடி
கை அசைக்கிறது
ஒரு குழந்தை
கண் மலர

விழுந்து இறந்துபோன
நீச்சல் குளத்திலிருந்து
மேலெழும்பி வந்து
கை அசைத்துப் போகிறது
இன்னொரு குழந்தை
கண்ணீர் உதிர

(நந்தனாவின் நினைவிற்கு)

3 comments:

  1. நந்தனாவின் இழப்பை எப்படி சித்ரா
    ஜீரணிக்கப்போகிறாரோ
    என்னால் கற்பனைசெய்து கூடப்
    பார்க்க இயலவில்லை...
    உங்கள் கவிதை அஞ்சலி
    சோகத்தை அதிகப்படுத்திப்போகிறது

    ReplyDelete
  2. ரமணி-இது ஒரு நெகிழ்வான சமர்பணம்தான்.சோகத்தை அதிகப்படுத்த அல்ல...

    ReplyDelete