Tuesday, April 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

445-

நான் விழுந்ததைப் பார்த்தவர்
சிரித்துக்கொண்டே போனார்

எழுந்ததைப் பார்த்தவர்
முறைத்துக்கொண்டே போனார்

விழுந்ததற்கும் எழுந்ததற்கும்
இடையில்
நடந்து சென்றதைப் பார்த்தவர்
கைதட்டிக்கொண்டே போனார்

No comments:

Post a Comment