Saturday, April 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

437-

வெட்டியவன் சொன்னான்
உன் பாவங்களை
உன் ரத்தத்தால் கழுவுகிறேன்

அதிர்ச்சியுடன் எழுந்தேன்
கனவுகள்
உண்மை பேசுமா என்ன

438-

தீரா நான்
தீரா என்னில்
தீரா வேட்கையுடன்

439-

அலைந்து திரிந்து
திரிந்து அலைந்து
வந்து சேர்ந்தேன்
அலைந்து திரிய
திரிந்து அலைய

440-

கனவு அறுத்த தூக்கங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
கண்ணுக்குள்

441-

மூழ்கியவர்கள் பட்டியலில்
என்னையும் சேர்க்க
முயற்சிக்கிறீர்கள்

கரை சேர்ந்த
என்னைப் பார்த்தபடியே

442-

விளக்கணைகிறேன்
இருளுடன்
பேச வேண்டும்

443-

மின்னல் ஒளி போதும்
கடக்க

மழைத்துளி போதும்
குடிக்க

444-

என் ஆழம் அறிந்தால்
உயரம் உணர்வாய்
சொன்னது மலை

1 comment: