Saturday, March 26, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

430-

விளிம்பில்
வழியும் துளி
பூமியைப்
பாத்திரமாக்கிக்கொள்ளும்

431-

ஆழத்தில் உடையாமல்
நீந்துகின்றன
ஞாபகக்குமிழ்கள்

432-

தயக்கம்
தான் விழுங்கும்
காலங்களைத்
துப்புவதே இல்லை

தயங்குபவன்
தன்னைத் தின்னக்கொடுக்கும்
காலத்திடமிருந்து
தப்புவதே இல்லை

1 comment: