Thursday, March 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

425-
விதைக்குள்
என்னை அடைத்தேன்
அதனால்
நானும் முளைத்தேன்

426-

இப்படித்தான் நீங்கள்
என்னைக் கொன்றீர்கள்

இப்படித்தான் நான்
உங்களைக் கொன்றேன்

இப்படித்தான் அவர்கள்
நம்மைக் கொன்றார்கள்

427-

கூட்டத்தில்
அழுதுகொண்டே
கடந்து போகிறாள் ஒருத்தி

அவள் அழுகையோடு
நடந்து போகிறேன் நான்

428-

சிதறிக்கிடக்கின்றன
தூக்கங்கள்
இரவில் சேர்ந்தால்
இமைகள் மூடலாம்

429-

பிடிபட்டவன் சொன்னான்
உங்களில் யார் யார்
திருடர்கள் என்று
எனக்குத் தெரியும்

2 comments: