Tuesday, March 15, 2011

சிறுமியின் கதைகள்

சிறுமி
கதை கேட்டாள்

என்னிடம் சொல்ல
எதுவுமில்லை என்றேன்

நான் சொல்லட்டுமா
என்றாள்

உன்னிடம் கதை
இருக்கிறதா

இல்லை என்பதுபோல்
தலையாட்டினாள்

பிறகு எப்படி
சொல்வாய்

சிரித்தபடியே சொன்னாள்

இருப்பதை
சொல்வதல்ல கதை
சொல்ல சொல்ல
வருவதே கதை

3 comments: