Sunday, March 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

407-

ஏரியில்
எறிந்த கல்லோடு
இறங்கிக்கொண்டிருந்தேன்
என்னை மீனாக்கிவிட்டு
புதைந்து போனது கல்

408-

காட்டிக்கொடுக்கும்
கண்ணீர்
புன்னகையில்தான்
மறைக்க வேண்டும்

409-

சிலரை நினைவிலிருந்து
தவறவே விடக்கூடாது
சிலரை தவறியும்
நினைவிற்குள்
வரவிடக்கூடாது

410-

காற்றைக்
கிழித்தது வாள்

துடித்து விழுந்தன
சொற்கள்

மூச்சற்று அடங்கினேன்
நான்

411-

பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
ஆனாலும்
பதிவு செய்யப்பட்ட குரலில்

412-

பசி உருவாக்கும்
பசிகள்
எப்பசி அடைக்க

413-

என் நிழலில்
இளைப்பாரும்
வெயில்

3 comments:

  1. என் நிழலில்
    இளைப்பாரும்
    வெயில்
    - wow.. this is awesome Sir.

    ReplyDelete
  2. //
    காட்டிக்கொடுக்கும்
    கண்ணீர்
    புன்னகையில்தான்
    மறைக்க வேண்டும்
    //

    :)

    //

    என் நிழலில்
    இளைப்பாரும்
    வெயில்

    //

    !!......

    ReplyDelete