Saturday, March 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

401-

பெருநகர் மீதும்
என் மீதும்
பெய்கிறது மழை

நனையாத
பெருநகர் பார்க்கிறது
நனைந்து போகும்
என்னை

402-

நாகரீகம் கருதி
நமது வாள்களை
மறைத்துவைத்திருக்கிறோம்

போர் முடிந்தபின்
தெரியும்

நம் வன்மத்தின் குரூரமும்
துரோகத்தின் வேஷமும்

403-

சொல்லுக்குள்
சுழலும் ஒலி
நிற்பதில்லை

404-

பொறுமையாக படியுங்கள்
சொற்களின் மீது
பட்டாம் பூச்சி

405-

அள்ளி வந்த மணலை
தெளிக்கும்போதெல்லாம்
அலையைப் பார்க்கிறது குழந்தை

406-

எல்லா வேஷமும்
கட்டி ஆடுவேன்
மனுஷ வேஷம்
கட்டும் போது
தோற்றுவிடுவேன்

1 comment:

  1. //
    பொறுமையாக படியுங்கள்
    சொற்களின் மீது
    பட்டாம் பூச்சி
    //

    hiyo...remmmmmmba pidichurukku:)


    //
    அள்ளி வந்த மணலை
    தெளிக்கும்போதெல்லாம்
    அலையைப் பார்க்கிறது குழந்தை
    //

    :)

    //
    எல்லா வேஷமும்
    கட்டி ஆடுவேன்
    மனுஷ வேஷம்
    கட்டும் போது
    தோற்றுவிடுவேன்
    //

    o...

    ReplyDelete