Monday, February 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

348-

ஒரே ஒரு
கண்ணீர்த்துளியோடு
உங்கள் அழுகையை
முடித்துக் கொள்ளமுடியுமா

வாய்விட்டுச் சிரிக்கிறேன்
வரும் ஒரு துளியோடு
நிறைவடைகிறது
நீங்கள் கேட்பது

349-

என் தியானம் கலைத்து
உள்ளிறங்குகிறது
ஒரு கல்
தன் தியான
இடம் தேடி

350-

கையிலிருந்த
ஆணியை அறைய
இறங்கிக்கொண்டிருந்தது
சுவரிலும் வானிலும்

2 comments: