Sunday, February 06, 2011

ஒரு சிறு கோடு

முன் திட்டம்
தயாராயிற்று

புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை

அணுகினேன்

உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்

குவிந்துப் பார்த்தார்

அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்

அதிலிருந்தது
கோடு

நேராய்
வளைவாய்
பலவாய்

பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்

ஒரு கணம் நின்று
நடந்தேன்

என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்

3 comments:

  1. நல்லாருக்கு சந்திரா!

    ReplyDelete
  2. நன்றி பா.ரா.ரொம்ப நாளாயிற்று பார்த்து.நன்றி கனாக்காதலன்.

    ReplyDelete