Saturday, January 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

297-

ஒற்றை வரி
உறங்குகிறது
அதில் மொத்த கவிதையும்
விழித்திருக்கிறது

298-

பொய் வண்ணங்கள்
தொட அஞ்சுகிறது
தூரிகை

299-

சத்தமின்றி
காலருகே
வரும் பாதை
நடக்கையில்
முன்போய்
விரிந்து
வழி காட்டும்

300-

படிக்காத புத்தகம்
என் சோம்பலைப்
படித்தபடி

3 comments:

  1. மொத்தக் கவிதையையும் விழிக்க வைத்து தூங்கும் ஒற்றைவரி அருமை.

    ReplyDelete
  2. 297.
    அழகு!

    299.
    நம்பிக்கை தொனிக்கும் வரிகள்.

    300.
    இது போன்ற படிக்காத புத்தகம் நிறையவே இருக்கிறது என்னிடமும். :(

    ReplyDelete
  3. "ஒற்றை வரி.." அருமையான கவிதை...தங்களின் ஆளுமைக்கு வணக்கங்கள்..

    ReplyDelete