Friday, December 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

285-

இருளில்
நீந்தி நீந்தி மேலேறுவது
பிடித்திருக்கிறது

286-

விரல் நுனியில் கண்ணீர்துளி
உதிர்ந்த காரணத்தைச் சொல்லாமல்
கரைந்து போனது காற்றில்

287-

பார்க்காமல் விட்ட பறவை
வந்தமர்ந்தது
கனவின் கிளையில்

288-

பிறக்காத மொழி ஒன்றை
பேசியது
பிறந்த குழந்தை

289-

பதிலைப் போல்
கிடைத்தது
கேள்வி

5 comments: