Sunday, December 26, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

290-

நீண்ட தூரம்
போய்ப் பார்த்தேன்
தென்படவில்லை
தாளில் எதுவும்

291-

தற்கொலையை மறுப்பவன்
தூக்குக் கயிறை வரைந்து
கிழித்துப் போடுகிறான்

292-

போய் வா
என்றான்

வந்தபின்
போ போ
என்றான்

போகையில்
வா வா
என்றான்

இதையே
சொன்னான்
போனபின்னும்

தன்
நிழலிடம்

2 comments:

  1. "தற்கொலையை மறுப்பவன்..."
    super thought... its like height of cowardliness...

    ReplyDelete