Monday, December 27, 2010

நீர் வளையங்கள்

குளத்தின் நிதானத்தை
அமைதியாய் உணர்ந்தான்

கையிலிருந்த
கல்லெறிய
பேரமைதியைக் கண்டான்

நீந்தி வந்த
நீர் வளையங்களைப்
பிறகு பார்த்தான்

அமைதியாக
பேரமைதியாக

1 comment:

  1. நீந்தி வந்த நீர் வளையங்களைப் போல அமைதியும் பேரமைதியும் அழகு.

    ReplyDelete