Thursday, November 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

232-

கிண்ணத்தின் விளிம்பிலிருந்து
ததும்பும் நீர் போல்
ததும்புகிறது மனது
மனதிலிருந்து

233-

உண்மைக்குள்
நுழைந்து கிடந்தேன்
பொய்கள்
மக்கி முடிய

வெளிவரலாம்
ஒரு நாள்

உண்மையின் துகளென
அல்லது
பொய்யின் உடலென

234-

வரியை
கவ்விப்போன
கனவை விரட்டினேன்
கனவைப் போட்டுவிட்டு
ஓடியது வரி

3 comments:

  1. ரொம்பநாள் கழிச்சு வர்றேன் சார். நிறைய மிஸ் பண்ணிட்டேன். பொறுமையாகப் படிக்க வேண்டும்.
    இரண்டாவதும், மூன்றாவதும் மிகவும் ரசிக்க வைத்தது. நன்றி.

    ReplyDelete
  2. எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete