Sunday, November 14, 2010

மகளின் மெழுகுவத்தி

மெழுகுவத்தி
வரைந்து கொண்டிருந்தாள் மகள்

கண்கள் ஒளிர
வண்ணம் பூசி
அழகாய்
நேர்த்தியாய்

திரியை வரைந்தபோது
இருளானது

ஆனாலும் தொடர்ந்தாள்

மின்சாரம் வந்து
பார்க்க
மின்னியது மெழுகுவத்தி

ஆடி அழைப்பதுபோல் திரி

ஆச்சர்யத்துடன்
கேட்டேன்

சொன்னாள்

எனக்கு மட்டும்
வெளிச்சம் காட்டுச்சு
மெழுகுவத்தி
அதுலயே வரைஞ்சி
முடிச்சிட்டேன்பா

9 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க......

    ReplyDelete
  2. kuzhanthaikal thina nal vaazhthukal....!

    ReplyDelete
  3. நன்றி கெளரிப்ரியா,கெள்சல்யா,சே.குமார்,
    அன்பரசன்,இரசிகை ஷபார்.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு சார்:)

    ReplyDelete
  5. // எனக்கு மட்டும்
    வெளிச்சம் காட்டுச்சு
    மெழுகுவத்தி
    அதுலயே வரைஞ்சி
    முடிச்சிட்டேன்பா //

    வரிகளில் மின்னும் குழந்தைத்தனமும் குறும்பும் அழகு சார்.

    ReplyDelete