Thursday, November 11, 2010

கடல் பார்த்தல்

இருளில்
கடல் பார்க்க
இருளெனக் கிடந்தது

பகலில்
கடல் பார்க்க
பகலெனத் தெரிந்தது

இரவுக்கும் பகலுக்கும்
நடுவில் வந்து
கால் நனைத்த அலை
கேட்டுப் போனது

கடலை நீ எப்போது
கடலாகப்
பார்க்கப் போகிறாய்

3 comments:

  1. அது போலவே வாழ்க்கையையும் வாழ்க்கையாக ரசிக்கத் தவறி விடுகிறோம்.

    ReplyDelete