Tuesday, November 02, 2010

தேடல்

கடலின் மேற்பரப்பில்
அமர இடம் தேடி
பறக்கிறது
ஒரு சிறு பறவை

பாவமாக இருந்தது

பின்னொரு நாள்
ஒரு மீன்குஞ்சிடம்
பேசிக்கொண்டிருந்தபோது
கவலையுடன் சொன்னேன்
அந்த பறவைப் பற்றி

நான்தான்
அந்த பறவை
அமர இடம் கிடைக்காததால்
மீனாகி
நீந்திக்கொண்டிருக்கிறேன்
எனச் சொல்லி
நீரைப் புன்னகைக்க வைத்தபடியே
மறைந்து போனது

இப்போது பார்க்க
கடலின் மேல்
எதுவுமில்லை


நடந்த போது
மனதின் இதத்தைப் போல
தொடங்கியது
மழை

5 comments: