Thursday, October 07, 2010

குழந்தைகள்

1-

குதிக்கும் போதெல்லாம்
ஆகாயத்தைக்
கையள்ளும் குழந்தை

2-

குழந்தையின் கையில்
குழந்தை போலிருக்கும்
நாய்க்குட்டியை
குழந்தைபோல்
கொஞ்ச ஆசை

கேட்டுக் கிடைத்தது
தோல்விதான்

கையசைத்துவிட்டு
ஓடுகிறாள் குழந்தை
தன் சொர்க்கத்தைத் தராமல்

4 comments:

  1. குழந்தைன்னாலே அழகுதானே:)

    ReplyDelete
  2. 1.

    ஆகாயத்தை மட்டுமல்ல என் மனதையும் அள்ளிக் கொண்டது அந்த குழந்தை.


    2.

    சொர்க்கத்தைத் தராமல் ஓடும் குழந்தையை விரட்டி பிடிக்கத் தோன்றுகிறது, ஒரு பூவினைப் போல அணைத்துக் கொள்வதற்கு.

    ReplyDelete
  3. இதுதான் சார் அழகுங்கிறது...

    ReplyDelete
  4. நன்றியும் அன்பும்-வானம்பாடிகள்,கல்யாணி சுரேஷ்,க.பாலாசி.

    ReplyDelete