Thursday, September 23, 2010

சிலருக்கு...

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன் என்றார்
ஒன்றுமே இல்லாதிருந்தவர்

விநோதமாக
அவரைப் பார்த்து
கடந்தனர் எல்லோரும்

சிரித்தபடியே
யாருக்கும் எதுவும் தேவையில்லை
நானே வைத்துக் கொள்கிறேன் என்றார்

கடந்து போனவர்களில் சிலர்
அவர் சொன்னதைச்
சொல்லிப் பார்த்துக் கொண்டனர்

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன்

சிலருக்குத் தந்தது போலிருந்தது

சிலருக்குப் பெற்றது போலிருந்தது

3 comments: