Saturday, September 18, 2010

காற்றில் தைத்த சட்டை

பறந்து கொண்டிருந்த
சிறுமி சொன்னாள்
நான் காற்றைத் தைத்து
சட்டையாகப் போட்டிருக்கிறேன்

ஒரு பறவையின் லாவகம்
பறத்தலில் தெரிந்தது

அவள் சொன்ன
காற்றுச் சட்டை
பிம்பத்திற்குள் சிக்காமல்
நழுவியது

மறுநாள்
பள்ளிக்குச் சென்ற சிறுமியை
வழியில் பார்த்துக் கேட்டேன்
காற்றுச் சட்டை
எங்கே என்று

அது காற்றிலேயே இருக்கிறது
நான் பறக்க நினைக்கும்போது
அதில் புகுந்து கொள்வேன்
சிரித்து சொல்லியபடியே
ஓடிப்போனாள்

ஓடினாளா பறந்தாளா
தெரியவில்லை

(கிருத்திகாவிற்கு)

4 comments:

  1. ஆனா நம்மளை ஆனந்தத்தில் பறக்க வைத்து விடுவார்கள் அண்ணே

    ReplyDelete
  2. குழந்தைகளின் உலகம் இறகுகளால் ஆனது..இல்லையா கிரேட்.

    ReplyDelete