Saturday, September 11, 2010

குழந்தையின் ஓவியங்கள்

நான் குழந்தையின் கையிலுள்ள
பென்சிலாக மாறினேன்

குழந்தை வரைந்தது

கூர்ந்து
கவனித்து
முகத்தை
முன்கொண்டுபோய்
அதுவே
ஒரு ஓவியமாகி
வரைந்தது

குழந்தையின்
கண்களுக்கும் உதட்டுக்கும்
இடையில் பரவியது
வரைந்து முடித்த
புன்னகை

பின் பென்சிலை
முத்தமிட்டு
கீழே வைத்து
வேறு ஒன்றை எடுத்து
இன்னொரு உலகத்திற்கு
செல்லத் தயாரானது

வரைந்த தாளிலிருந்து
வெளியேறினேன் நான்
குழந்தைக்கு நன்றியை
வண்ணங்களாகத்
தூவிவிட்டு

6 comments:

  1. அருமை.. மெல்லிய புன்னகையை வரவைத்தது.. மிக்க நன்றி

    ReplyDelete
  2. ரொம்ப அழகுங்க:)

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்!

    ReplyDelete