Thursday, August 19, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

156-

கண்களில்
குவிந்து கிடக்கும் தைரியம்
போ எனச் சொல்லி
வெளியேற்றுகிறது
கையாலாகாத கண்ணீரை

157-

தயங்கி தயங்கி
பிரார்த்தனையைச் சொன்னேன்
போயிருந்தார் கடவுள்

158-

இந்த சிறையிலிருந்து
வெளியே
வந்தபோதுதான்
நிறைய சிறைகளுக்குள்
என்னை பூட்டி வைத்திருப்பது
தெரிய வந்தது

159-

பெருங்காட்டை
தரிசித்து
வெளிவந்தேன்
உள்ளங்கையில்
பூத்திருந்தது
மூலிகைச் செடி

2 comments:

  1. 156.
    கண்ணீரில் கரைந்து போன தைரியத்தை எப்படி திரும்பப் பெறுவது?

    157.
    கடவுளிடம் என்னங்க தயக்கம்?

    158.
    அருமையான வரிகள்.

    159.
    மூலிகை செடி வாடிப் போகாமல் பார்த்துக்கோங்க.

    ReplyDelete