Wednesday, August 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

146-

சிறைபட
உணர்கிறேன்
விடுதலை

147-

யாரும் கவனிக்காத
தப்பை செய்தேன்
நான் கவனிக்க

148-

வெற்றுப் பாத்திரத்தில்
நிரம்புகிறது இசை
மழை

149-

இமை மூடி
திற
தூக்கம் முடி

150-

என் கால்களின்
மேலே இருப்பது
நானல்ல
ஒரு உலகம்

1 comment: