Sunday, August 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

143-

நான் தேடி வந்தவன்
கூட்டத்தில் இல்லை
என்னைத் தேடி
வந்தவன் இருந்தான்

144-

யாரும் காப்பாற்றக் காணோம்
சொல்லிடுக்கில்
சிக்கிக் கொண்ட மெளனம்

145-

சில உரையாடல்களுக்கு
நடுவில்
இறந்து போகின்றன
பல உரையாடல்கள்

2 comments:

  1. 143.
    இப்படித்தான் பல சமயங்களில் நேர்ந்து விடுகிறது.

    144.
    சொல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட மௌனத்தை போல் கவிதைக்குள் சிக்கிக்கொண்டேன் நான்.

    145.
    உண்மைதான் ராஜா.

    ReplyDelete
  2. மூன்றும் அருமை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete